முச்சக்கரவண்டிகளை எரிபொருள் ஒதுக்கீட்டுக்கு பதிவு செய்யும் போது பணம் அறவிடத் தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் போது 500 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

உரிய ஆவணங்களுக்காக அத்தொகை அறவிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 25,000 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் நாளை திங்கட்கிழமை (21) முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான சீனாவின் உறுதியான உதவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ்...
கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் - ஆய்வு செய்த குழு அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த ...
தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலம் - நாடா...