உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி – நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2024

உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி கிடைத்திருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பி.ஆர்.எஸ் குணவர்தனவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில் முயற்சி மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக கலாநி.எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகமவின் நியமனத்துக்கும் அங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக எஸ்.சி.ஜே.தேவேந்திரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாந்து மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவராக எம்.ஜே.சூசைதாசன் ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

காணியற்ற 186 குடும்பங்களுக்காக 116 மில்லியன் ரூபா செலவில் காணிகள் கொள்வனவு செய்து வழங்கிவைப்பு- யாழ்...
பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் கரிசனை - அனைத்து மக்களுக்கும் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக...
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் வழங்கப்பட்டது - உள்நாட்டலுவல்கள் அமை...