போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றம் விழிப்புணர்வுகள் குறித்து வெளிவிவகார அமைச்சருக்கு ஐ.நா. பிரதிநிதி விளக்கம்!

Tuesday, September 12th, 2023

ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்திய அலுவலக பிரதிநிதியான மார்கோ டீக்சீரா வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கைளை மேற்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்திய அலுவலகம் தெற்காசியாவில் முன்னெடுத்துவரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றம் விழிப்புணர்வுகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சருக்கு ஐ.நா. பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

000

Related posts:

19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க ஜனாதிபதிக்கு இணக்கமில்லை - முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவிப்ப...
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு ந...
இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் - பேராதனை பல்கலையுடனும் ஒப்பந்...