போட்டிக் கல்வி முறைமையால் தனியார் வகுப்புகளுக்காக 30 வீத நிதியை மேலதிகமாக பெற்றோர் செலவிடுகின்றனர் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2024

தற்போதைய போட்டிக் கல்வி முறைமையில் அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் தொகையை விட பெற்றோர்கள் 30 சதவீதம் அதிகமாக தனியார் வகுப்புகளுக்காக செலவிட வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்பொது அவர் மேலும் கூறுகையில் – இன்றைய நிலையில் கல்விக் கட்டணம் நாட்டின் அத்தியாவசிய நாணயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.  பொதுவாக ஒரு குழந்தை 20,000 ரூபாயை பிரத்யேக வகுப்பிற்காக செலவழிக்கிறது.

நம் நாட்டில் 5.7 மில்லியன் குடும்பங்கள் உள்ளன, பெற்றோர்கள் குறித்த வகுப்புகளுக்காக சுமார் 121 முதல் 122 பில்லியன் வரை செலவிடுகிறார்கள்.

2024 ஆம் ஆண்டுக்காக நிதியமைச்சகத்திலிருந்து அரசாங்கம் 546 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.  மொத்தக் கல்விச் செலவீனத்தில் 402 பில்லியன் ரூபா நாட்டிலுள்ள பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்பட்டது. இதில் மக்களின் தனியார் வகுப்பு கல்விச் செலவுகள் சேர்க்கப்படவில்லை.

நம் நாட்டில் உள்ள பணவீக்க உயர்வை குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது, என்று அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: