மிக சிறப்பாக நடைபெற்ற தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா !
Wednesday, August 30th, 2023ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 16 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளை (31) காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. இன்றைறைய நாள் தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான வேண்டுகோள்!
மஹிந்த மாமாவிடம் நீதி கோரி யாழ். பொம்மைவெளியில் போராட்டம்!
சுகாதார துறைக்கான உடனடி மறுசீரமைப்பு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஜனாதிபதி ரணில் ...
|
|