போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பேருந்துகளின் அலங்காரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, November 8th, 2023

பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் விசேட பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளின் அலங்காரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட கலந்துரையாடல் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் இடம்பெற்றது.

இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பயணிகள், பாதசாரிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேருந்துகளை அலங்கரிப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

கடந்த சில காலமாக அளவுக்கு அதிகமான அலங்காரங்கள் காரணமாக பேருந்துகளில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சுக்கு முறைப்பாடுகளை அளித்து வந்துள்ளனர்.

இதனை பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ள போக்குவரத்து அமைச்சு இதற்காக புதிய சட்ட விதிகளை உருவாக்க உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: