கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பு – மேலும் 10 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி!

Monday, December 7th, 2020

நாட்டில் உள்ள மேலும் 10 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்..

அதற்கமைய 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமன் ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத் தேர்வு செய்ய ...
புலமைப்பரிசில் - உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் முக்கிய தீர்மானம் - கல்வி அமைச்...
தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கு சதி முயற்சிகள் முன்ன...