யாழ்.கல்வி வலயத்துக்கு நிரந்தர கல்விப்பணிப்பாளரை நியமிக்குமாறு கோரிக்கை!

Thursday, March 21st, 2019

நிரந்தர வலயக் கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படாமையால் யாழ்ப்பாணக்கல்வி வலயம் நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருகின்றது. இந்த நியமனம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் பதவி வெற்றிடமாகக் காணப்படுவதால் இந்த வலயத்தில் உள்ளவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர் நோக்கி வருகின்றனர். வடக்கு மாகாணத்தில் அதிகளவு பாடசாலைகளையும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரபல்யமான பாடசாலைகளையும் கொண்டது யாழ்ப்பாண வலயம். இந்த வலயத்துக்கு ஒரு வருடத்துக்கு மேலாக நிரந்தர கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. இதனால் யாழ்ப்பாணக் கல்வி வலய அலுவலகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள் மத்தியில் விரக்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே வடக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

Related posts:

இ.போ.சபை பேருந்து தாக்குதலுடன் தனியார் பேருந்து நடத்துநர் தொடர்பு  - வவுனியா பொலிஸார் தெரிவிப்பு!
போதைப் பொருள் பாவனை போன்று தொலைபேசிப் பாவனையினூடான ஆபத்தும் சிறுவர்களிடையே அதிகரித்துள்ளது - யாழ்ப்...
கல்லுண்டாய் வீதியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...