மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகராக முஸம்மில் !
Thursday, December 29th, 2016மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள ஏ.ஜே.எம்.முஸம்மில் சம்மதம் தெரிவித்துள்ளார் எனவும் வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது..
இதேவேளை, மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸாரிற்கு பதிலாகவே முஸம்மில் உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும் மலேசியா கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மகிந்த ராஜபக்ஸவின் எதிர்ப்பாளர்களால் மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார், கடந்த செப்டம்பர் மாதம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனம் உற்பத்திப் பொருள் கண்காட்சி !
முடிவுக்கு வருகின்றதா கொரோனா வைரஸின் சகாப்தம்? சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவல்!
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் 'நதிகளைப் பாதுகாப்போம்' வேலைத்திட்டம் முன்னெ...
|
|