பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய வேலைத்திட்டம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020

பொலிஸ் நிலையங்களினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாட்டு பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பொது முறைப்பாடு தொடர்பில் மேற்கொளளப்படும் விசாரணைகளை மேலும் செயல்திறனும் மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்ணான்டோ –

அரசியலமைப்புச் திருத்தம் மிகவும் முக்கியமான திருத்தமாக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அமைந்துள்ளது.

ஆணைக்குழுவிடம் இருந்த பொலிஸ் பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் பொலிஸ்மா அதிபருக்கு மற்றும் பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் முறைப்பாடுகளை முறையாக விசாரணை செய்து உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதே தற்போது பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:

13 ஆவது திருத்தமே அரசியல் தீர்வுக்கு வழி: பாரதப் பிரதமரிடம் வலியுறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு!
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் - ...
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி = எகிப்தில் இடம்பெற்ற அரச தலைவர்களுக்கு இடைய...