பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு!
Friday, November 3rd, 2023ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வாறு சேவை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சேவை நீடிப்பானது நான்காவது முறையாக வழங்கப்படுவதோடு இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டு முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு செய்ய விரும்பினால் ‘118’ என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
அதன்படி,பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை பொலிஸ் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த இலக்கம் பொது பாதுகாப்பு அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும் முறைப்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|