பொலிஸார் ஊடாக நடவடிக்கை – யாழ் அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Wednesday, June 17th, 2020

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலியா உள்ளிட்ட கிட்டங்களின் பாதைகளிலில் உள்ள அரசியல் வாதிகளின் படங்கள் அகற்றுவதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதிகளில் வேட்பாளர்களின் பெயர்களை வரைவது தேர்தல் சட்டத்திற்கு விரோதமான செயற்பாடு.  இதனை மீறுபவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் 17.06.2020 அன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – நாட்டில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினை கருத்தில் கொண்டு செயற்படுமாறு தேர்தல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பதாகைகள் பொது இடங்களில் காணப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் கம்பரேலியா திடடத்தின் போது நாட்டப்பட்ட பதாதைகளில் உள்ள அரசியல் வாதிகளின் படங்களை ஸ்டிக்கர் ஊடாக மறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகளில் வேட்ப்பாளர்களின் பெயர்கள்,கட்சியின் சின்னம் ஆகியன வரையப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த செயற்பாடானது முற்றிலும் தேர்தல் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும். எனவே அவ்வாறான செயலில் ஈடுபடுவார்கள் மீது தேர்தல் சடடத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts:

டிஜிட்டல் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் நீக்கப்படுகின்றது முக்கிய பகுதி - பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. ...
ஜி.எஸ்.பி ப்ளஸ் சலுகையை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் கலந்துரையாட...
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக இருந்த 50 கிலோ கஞ்சா மாயம் - தெல்லிப்பளை பொலிஸ் நிலைய...

எத்தனை நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன் - அமைச்சர் ராஜித !
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சு...
முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை - விவசாய அமை...