பொருட்களை நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!

Wednesday, December 20th, 2017

பண்டிகை காலப்பகுதியில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடக்கப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி வரையில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 3500 முற்றுகை மூலம் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்ற மற்றும் சட்டத்தை மீறிய 1000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: