நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது!
Tuesday, June 8th, 2021வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைமறுதினம் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்துவதற்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு திருவிழாவை பிற்போடப்பட்டுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தண்டப்பணம் விதிப்பது தொடர்பில் இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
ஆசிய பசுபிக்கின் சிறந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க - த பேங்கர்!
வாக்காளர் இடாப்பில் இருந்து 126,481 பெயர்கள் நீக்கம்!
|
|
வலயக் கல்விப்பணிப்பாளரை அச்சுறுத்திய மாகாண கல்வி அமைச்சர் - கண்டனம் தெரிவிக்கிறது இலங்கை ஆசிரியர் சங...
எமக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் - வாகன இறக்குமதியாளர் சங்க...
வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் - வட மாகாண அதிபர்கள் சங்கம...