அடுத்த மாதம் காட்டு யானைகளின் கணக்கெடுப்பு!
Thursday, August 15th, 2019நாடு முழுவதும் உள்ள காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கணக்கெடுப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் நடமாடும் சகல பிரதேசங்களும் உள்ளடக்கப்படும் வகையில் 229 இடங்களில் 7 ஆயிரத்து 316 அதிகாரிகளால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இறுதியாக 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெறப்பட்ட தகவல்களுக்கமைய நாட்டில் 5 ஆயிரத்து 879 காட்டு யானைகள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
Related posts:
தொடர்ந்தும் இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!
இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய - இலங்கை நாடுகள் முயற்சி - இலங்கைக...
|
|