பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி – பொலிஸ் மா அதிபர்!
Tuesday, December 28th, 2021சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்
அதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் மாலை 6 மணிமுதல் 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
அத்துடன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணிமுதல் அதிகாலை ஒரு மணி வரை இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிமுதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
விமான படையினருக்கு விசேட பயிற்சி!
வடக்கில் இரண்டு நாட்கள் முழுமையான மின்சாரத்தடை - மின்சாரசபை அறிவிப்பு!
|
|