பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையிர் கடமையில் * ஜனாதிபதியின் விசேட உத்தரவு!
Wednesday, September 22nd, 2021
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய இன்றைய(22) நாடாளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட கட்டளையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாசித்திருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12 ஆவது சரத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாரம்பரியம் முக்கியமானது- யாழ் மாணவர் ஒன்றிய தலைவர்!
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான புதிய செயற்திட்டத்திற்கு சாரதிகள் எதிர்ப்பு!
தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் - பல்...
|
|
|


