பொதுப் போக்குவரத்தின் போது சுகாதார விதிமறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Monday, May 10th, 2021

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரேனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை, பொதுப் போக்குவரத்தின் போது மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பேருந்து, ரக்ஸி மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக இன்று(10) விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுப்போக்குவரத்து தொடர்பான பரிந்துரைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related posts: