மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, July 3rd, 2020

கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வரை இருக்காமல் ஏற்றுமதி விவசாயத்தை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார். கைத்தொழில்கள் உருவாவது மட்டும் அபிவிருத்தி ஆகாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாயத்தை மையப்படுத்தி கிராமிய தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

தேவையை மிகச் சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வழிமுறை குறித்து கீழ் மட்டத்திலிருந்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் வணிக வங்கிகள் கடன்களை வழங்கும் போது உற்பத்தித்துறையை விடவும் வணிக பிரிவுக்கு அதிக கவனம் செலுத்துகின்றனர். பாராம்பரியங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது விவசாயிகளை உற்பத்திக்கு ஊக்குவிப்பது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts: