பொதுநலவாய அமைப்பின் செயலாளர் இலங்கையில்!
Wednesday, August 1st, 2018
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நான்கு நாள் பயணமாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் இன்று மதியம் இலங்கை வந்தடைந்தார்.
அவருடன் நான்கு பேர் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.
இந்த விஜயத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார். அத்துடன் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொதுநலவாய அமைப்பின் வர்த்தக செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
Related posts:
இலங்கையில் சொகுசு ரயில் அறிமுகம் - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!
பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் - ...
தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!
|
|
|


