பைஸர் தடுப்பூசியினை தவிர ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன – இராஜாங்க அமைச்ச்ர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
Monday, October 11th, 2021
நாட்டிற்கு தேவையான பைஸர் தடுப்பூசியினை தவிர, ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு விரைவில் கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தொடர்பிலான தவறான புரிதலே இதற்கான பிரதான காரணமாகும்.
இதேநேரம் சைனோபாஃம் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரே சமயத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்!
புதுக்குடியிருப்புக்கு கடமைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்கு தனியாகப் பேருந்து வேண்டும்!
கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலக தீர்ம...
|
|
|
கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு - மக்கள் நடமாட்டமின்றி வெறிச...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - மரணங்களின் அதிகரிப்பு வேகமானது 1.07 சதவீதமாக பத...
மசகு எண்ணெய்க்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் - ர...


