பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!

Thursday, December 22nd, 2016

அரை சொகுசு பஸ்களுக்கு சமமான வசதிகளை கொண்ட குறுகிய சேவை பஸ்களிலும், அரை சொகுசு பயணங்களுக்கான கட்டணத்தை அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த யோசனையை நேற்று போக்குவரத்து அமைச்சில் ஒப்படைத்ததாகவும், அதற்கான அனுமதி கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும், கட்டணம் அறிவிடப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையினுள் அரை சொகுசு பஸ் சேவை என்ற பெயரில் 500 பஸ்கள் பயணிப்பதாகவும், அந்த பஸ்கள் பயண கட்டணங்களுக்காக ஒன்றரை அளவு பணம் அறிவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரை சொகுசு என கூறப்படும் பஸ்களில் காணப்படும் வசதிகள் குறுகிய பயண சேவைகளிலும் 75 வீதம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

bus_fair-415x260

Related posts: