உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!
Sunday, January 21st, 2018
எதிர்வரும் மாசி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகின்றது.
இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றோரின் எண்ணிக்கை சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம்.
பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை இடம்பெறும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.
Related posts:
பலாலி விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகள்!
பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய வேலைத்திட்டம் - தேசிய பொலிஸ் ஆணைக்குழு...
எரிபொருள் - சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ஏழுமாதங்களாகும் - அமைச்சர் காமினி லொக்குக...
|
|