யாழ். மாநகர சபை ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்!

Thursday, November 16th, 2017

வடமாகாணத் திணைக்களங்களின் புதிய தலைமை அதிகாரிகளுக்கான புதிய நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல் குரே இன்றைய தினம்(15) வழங்கி வைத்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, யாழ் மாநகரசபை ஆணையாளராகப் பதவி வகித்த பொ.வாகீசன் வடமாகாண கூட்டுறவு ஆணையாளராகவும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்து வந்த சிவராஜலிங்கம் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக தற்காலிக பணிப்பாளராக எஸ்.பி.சிவநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் வடமாகாணப் பிரதம செயலர் ஏ.பத்திநாதன், ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன். உதவிச் செயலர் ஜே.எக்ஸ்.செல்வாநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts: