பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023

பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வெகு விரைவில் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வலி.தென்மேற்கு பிரதேசத்தில் வேகமாகப் பரவுகின்றது டெங்கு – கட்டுப்படுத்தும் முயற்சிகளும் தீவிரம்!
வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு மே மாதமும் 5 ஆயிரம் ரூபா நிவாரண உதவி – இன்றுமுதல் நடைம...
வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது அல்ல - மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்செய்யும் வகையில...