பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியானவர்களுக்கு கிராம அலுவலர் தேர்வை டிசம்பர் இரண்டாம் திகதி தேர்வுவை நடத்த உள்ளது.

தேர்வில் இருந்து கிராம அலுவலர் பணியிடங்களுக்கு 2,238 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் .” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: