இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Sunday, August 14th, 2022

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில் அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார்.

கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தாமரை மொட்டின் வெற்றி திருமலை மாகளின் குரலை நாடாளுமன்றிலும் ஒலிக்க வைக்கும் - யாழ் மாநகர முன்னாள் மு...
இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எழுந்தமானதாக புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாக ஆளுநர் கருத்த...
பொய்யான குற்றச்சாட்டு - ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!