அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்றுமுதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விடுமுறை !

Monday, July 4th, 2022

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விடுமுறை வாரமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொண்ட கலந்துரையாடலில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை தொடர்பில் ஆராய்ந்த பின்னர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாரத்தில் இடம்பெறாத பாடசாலை நாட்களை பாடசாலை விடுமுறை காலத்தில் ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: