மாங்குளத்தில் பேருந்து தடம்புரண்டது! 13 பல்கலை மாணவர்கள் படுகாயம்!

Wednesday, April 27th, 2016

யாழிப்பாணத்திலிதுந்து பதுளைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

குறித்த விபத்தினுள் 13 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.இவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த சமயம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைத் தூக்கம் காரணமாக திருப்பத்தில் பேருந்து தடம்புரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

Related posts: