ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!
Saturday, September 21st, 2019ஜனாதிபதித் தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்ளிட்ட மூவர் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக அபரெக்கே புன்யானந்த தேரரும் அபே ஜனபல சார்பில் சமன் பெரேராவும் இன்று கட்டுப்பணம் செலுத்தினர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் நேற்று கட்டுப்பணம் செலுத்தினர்.
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
பால் மா விலையை அதிகரிக்குமாறு வேண்டுகோள்!
பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு கொரியக் குடியரசு தொடர்ந்தும் உதவும் – கொரிய தூதுவர் சந்து...
|
|
சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி வலியுறுத்து!
நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அதிரடி உத்தரவு - வவுனியாவில் வாள்வெட்டு கலாசாரத்தை இல்லாதொழிக்க பொலிஸ...
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு!