பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மணல் கொள்ளையர்கள்!
Wednesday, June 19th, 2019
மணல் கொள்ளையை தடுப்பதற்காகச் சென்ற பெண் உத்தியோகத்தா் மீது மணல் கொள்ளையா்கள் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சார்வெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள செல்வபுரம் பகுதியில் தொடர்சியாக மணல் கடத்தல் இடம்பெறுவதாக மக்களால், குறித்த பகுதியில் தற்காலிக கடமையில் இருந்த பெண் கிராம உத்தியோகத்தருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து அங்கு சென்ற பெண் உத்தியோகத்தர், மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
அதன் போது அங்கிருந்த நபர் ஒருவர் உத்தியோகத்தரைத் தாக்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கல்வி பொதுத்தராதர சாதாரணதரத்தில் இனி ஆறு பாடங்கள்!
24 மணிநேரத்தில் 2,738 பேருக்கு கொவிட்-19 தொற்று!
மகாசங்கத்தினரை பாராட்டும் நிகழ்வுகள் பிரதமர் தலைமையில் முன்னெடுப்பு!
|
|
|


