புதையல் தோண்டியவர்கள் கைது.!

Wednesday, August 17th, 2016

திருகோணமலை குச்சவெளி கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குச்சவெளி காஸிம் நகர் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.  குச்சவெளி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts: