பெண்டோரா பேப்பர்ஸிலுள்ள இலங்கையர்கள் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, October 6th, 2021

‘பெண்டோரா பேப்பர்ஸ்’  என்ற பெயரில் வெளியான பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும், குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கையூட்டல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளிட்ட பலரின் மறைமுக சொத்துகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தும் பத்திரிகை, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், குறித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு ஒரு மாதத்துக்குள் அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க ட்விட்டர் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா - கிழக்கு மக்கள் பெருமிதம்! ...
குறிகாட்டுவான் தனியார் படகுச் சேவையாளர் பிரச்சினை வேலணை பிரதேச சபை தவிசாளரின் கருணாகரகுருமூர்த்தியின...
இலங்கையில் கொரோனாவின் தீவிர தாக்கம் வலுவிழந்து வருகின்றது - இரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ப...