புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, November 15th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், அடுத்தவாரம் பெறுபேறுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

3 இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

2 ஆயிரத்து 888 பரீட்சை மத்திய நிலையங்களில் இவர்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - பதிவாளர் நாயக தெரிவிப...
வவுனியா பல்கலைக்கழகம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கும் - பீடாதிபதி மங்களேஸ்வ...
இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போக வேண்டாம் - அமெரிக்காவுக்கு சீனா அறிவ...