புதிய பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

இந்த ஆண்டுக்கான பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுமுதல் இடம்பெறவுள்ளது.
இந்த விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அந்த விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து பாதீடு மூன்றாம் வாசிப்பு எனப்படும் பாதீடு குழுநிலை விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 19 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அந்த விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை , 2019 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய வெகன் ஆர் (Wagon R) சிற்றூர்தியின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கன மழை - கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!
தோழர் பாவான் அவர்களின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
எலிசபெத் மகாராணி மறைவையடுத்து புதிய அரசராக அரிழண ஏறினார் இளவரசர் 3 ஆம் சார்லஸ்!
|
|