புதிய நடைமுறையில் அரச பணியாளர்களுக்கு பதவி உயர்வு!  

Saturday, November 26th, 2016

அரச சேவையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு புதிய நடைமுறை ஒன்றை ஆரம்பிப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்..

எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.  இதற்கு முன்னர் காணப்பட்ட சேவைக் காலத்தின் அடிப்படையில் பதவி உயர்வி வழங்கும் நடைமுறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

அரச சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந்நடவடிக்கையை முன்னெடுப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கூறினார்.

1911530611Ranjith

Related posts: