நானாட்டான் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்தி தீர்வு பெற்று தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகம் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020

நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள காணி ஒன்றை மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் சட்டவிரோதமான முறையில் தனி ஒருவருக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுத்து நிறுத்தி ஆலயத்திற்கு அதை பெற்றுத்தருமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தெரியவரவதாவது –

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இராசமடு பிரதேசத்தில் நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலய நிர்வாகத்தால் பன்நொடுங்காலமாக பாராமரித்து பாதுகாத்து வந்த நெற்செய்கை காணியை , பிரதேச செயலாளர் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவருக்கு வழங்க முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.

ஆனாலும் குறித்த காணியை காலாகாலமாக ஆலய நிர்வாகவே பராமரித்து வருகின்றது. அந்தவகையில் குறித்த காணியை ஆலயத்திற்கு பெற்று தருமாறும் பிரதேச செயலாளாரின் தவறான செயல்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறும் ஆலய நிர்வாக சபையினரும், பிரதேச மக்களும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: