புதிய அரசியல் அமைப்பு தயாரிப்பு தொடர்பில் கருத்தரங்கு!

புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது குறித்து திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டமாக, திருகோணமலை மாவட்ட செயலத்தில் இது இன்று இடம்பெறவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட கருத்தரங்கு நேற்று மத்துகம பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தலோடு ஆரம்பமான இந்த செயற்றிட்டம் இதுவரை ஆறு மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது.
Related posts:
இலங்கையில் மீன் பதனிடும் தொழிற்சாலையை அமைக்க சீஷெல்ஸ் உதவி!
மீன் ஏற்றுமதியில் வளர்ச்சி - கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு!
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு!
|
|