புதிதாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி!
Friday, August 16th, 2024
2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், இலங்கையில் முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று (15.08.2024) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடலில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை!
துறைமுகத்திற்கு அருகாமையில் புதிதாக 30 தொழிற்சாலைகள் - அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம!
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜ...
|
|
|


