புதிதாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி!

Friday, August 16th, 2024

2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், இலங்கையில் முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று (15.08.2024) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: