புகையிரத பெட்டிகள் நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம்!

Friday, August 17th, 2018

உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் இடம்பெறும் இரத்மலானை பிரதேசத்திற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று(17) விஜயம் செய்துள்ளார்.
பயன்படுத்தாத நிலையில் காணப்படும் 200 புகையிரத பெட்டிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை இந்தியாவிலிருந்து புகையிரத பெட்டியொன்றை இறக்குமதி செய்ய ஆறு கோடி ரூபா செலவாகிறது என்றும் இலங்கையில் புகையிரத பெட்டியொன்றை நவீனமயப்படுத்த நான்கு கோடி 50 இலட்சம் ரூபா மாத்திரமே செலவாகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் நவீனமயப்படுத்தப்பட்ட 12 புகையிரத பெட்டிகள் களனி வழி புகையிரத பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக புகையிரத பெட்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளர்.

Related posts: