பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு!
Friday, December 9th, 2016மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் விவாகர அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த சட்டத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் மரக்கறி மற்றும் பழங்களை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யும் போது மட்டுமே பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை செயற்படுத்தவுள்ளதோடு, இதனை பின்பற்றுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை விவசாயிகளிடம் கோரியுள்ளது.
Related posts:
மீண்டும் அரிசி விற்பனையில் கட்டுப்பாட்டு விலை!
வடக்கில் அருகிச் செல்லும் மட்பாண்ட உற்பத்தி!
மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
|
|