பிரித்தானிய  இளவரசர்  இலங்கை வந்தடைந்தார்!

Wednesday, January 31st, 2018

பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் எட்வர்ட் இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று மதியம் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கவுள்ளனர். எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார்.

பிரித்தானிய அரச குடும்பத்துக்கான அழைப்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சால் அனுப்பப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உறுப்பினராக இணைந்துக்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை ஆரம்பித்தவர் எலிஸபெத் மகாராணியாவார்.

Related posts: