மாணவர் சமூகம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை – விரைவில் மாற்றங்கள் உள்வாங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!

Friday, December 10th, 2021

நாட்டின் தற்போதைய கல்வி முறைமையானது உலகின் ஏனைய கல்வி முறைமைகளுக்கு பொருத்தப்பாடுடையதல்ல எனவும் அது 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தக்கூடியதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாணவர் சமூகம் பாதிக்கப்படுவதனை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்திற் புறம்பாக பல்கலைக்கழகங்களை நிறுவுவதனை எதிர்ப்பது துயரம் மிகுந்தது என்பதுடன் பாரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் இவ்வாறான குறுகிய எண்ணங்களுடன் செயற்பட்டால் அது மாணவர் சமூகங்கள் பலவற்றை பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்படுவதனை தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு துரித கதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் உயர் கல்வியில் விரிவான மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையானது உலகின் ஏனைய கல்வி முறைமைகளுக்கு பொருத்தப்பாடுடையதல்ல. அத்துடன் அது 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தக்கூடியதும் அல்ல எனவும் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நாட்டின் கல்வி முறையில் மாற்றம் செய்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: