போர்ட் சிட்டிக்கு மாற்றாக பொருளாதார நகரம்!

Saturday, June 18th, 2016

கொழும்பில் அமைக்கப்பட இருந்த போர்ட்சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் சீனாவின் சைனா ஹார்பர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெறுமனே கேளிக்கை அம்சங்கள் மட்டும் கொண்ட துறைமுக நகரமொன்றுக்குப் பதிலாக பொருளாதார நகரம் ஒன்று காலிமுகத்திடல் அருகே அமைக்கப்படவுள்ளது.

தற்போதைக்கு உலகின் சந்தைப்படுத்தல் மத்திய நிலையங்களாகவும், பொருளாதார நகரங்களாகவும் கருதப்படும் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு மத்தியில் அமையும் இன்னொரு பொருளாதார நகரமாக இது மாற்றம் பெறும்.

குறித்த பொருளாதார நகரம் அமையவுள்ள காணி சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படுவதற்குப் பதில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார நகரம் அமையப்பெறும் பட்சத்தில் உலகின் அனைத்து நாடுகளின் உற்பத்திகளும் இலங்கையில் இருந்து சர்வதேச சந்தைக்கு விற்பனை செய்யப்படும் வாய்ப்பு ஏற்படும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: