பிரதமர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை!

Wednesday, May 12th, 2021

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் ஒன்றுகூடினர்.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், இதன்போது தலைவர்களது கவனத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன் எதிர்கால நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு அந்தந்த பிரதேசங்களில் சிகிச்சை மையங்களை நிறுவுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கொவிட் தொற்றுநோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்ப்பது தொடர்பில் கட்சி தலைவர்கள் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: