பிரதமர் இன்று சிங்கப்பூர் பயணம்!

Sunday, July 8th, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் சிங்கப்பூரிற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை சிங்கப்பூரில் 06 ஆவது சர்வதேச நகரம் மாநாடு ஆரம்பிக்கவுள்ளது.
இதில் கலந்து கொள்வதை பிரதான நோக்கமாக கொண்டே பிரதமர் சிங்கப்பூரிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அத்துடன், “நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடலை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் பிரதமர் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட உள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts: