பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Wednesday, February 8th, 2023

நில அதிர்வுகளால் பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில், இலங்கை, துருக்கி மக்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீட்புப் பணிகளுக்காக, இலங்கை இராணுவ குழுவும் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகனுடன் சிறிது நேரத்திற்கு நேற்றுமாலை உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: