பாடப்புத்தகங்களை ஆராய விசேட குழு – கல்வி அமைச்சு!
Wednesday, July 3rd, 2019நாட்டிலுள்ள பிரதான மதங்கள் சார்ந்த பாடப்புத்தகங்களை ஆராய்வதற்காக கல்வி அமைச்சினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத பாடப்புத்தகங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்துக்கிடையில் பிரிவினைகளை உண்டாக்கும் வகையிலும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராயவே இக்குழு இயமிக்கபட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் ஜயந்த விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.
அதன்படி 11ஆம் தரம் வரையிலான இந்து, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் பாடப்புத்தகங்களும் உயர்தரத்தின் ஆசிரியர் கையேடுகளும் இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் பாடப்புத்தகங்களை ஆரம்பம் முதல் ஆய்வு செய்வது கடினமான பணி எனவும், அதற்காக கல்வி அமைச்சின் விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் ஆய்வின் இறுதி அறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது உள்ள மத பாடப்புத்தகங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்துக்கிடையில் பிரிவினைகளை உண்டாக்கும் வகையிலும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் அவை நீக்கப்படும் எனவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் ஜயந்த விக்ரமநாயக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|