பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ – நீதி அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி!
Wednesday, March 17th, 2021பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்பதை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான பொருத்தமான முறையை வகுப்பதற்காக நாடாளுமன்ற துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 8 பேர் கொண்ட குழுவில் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூஃப் ஹக்கீம், எஸ்.ஸ்ரீதரன், வீரசுமண வீரசிங்க, சாகர கரியவாசம், அமரகீர்த்தி அத்துகோரள, டயானா கமகே மற்றும் மேஜர் சுதர்ஷனாடெனிபிட்டிய ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த துணைக்குழுவின் செயலாளராக உதவி பொதுச் செயலாளர் டிக்கிரி கே.ஜெயதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி –
சட்டத்தின், பொது அறிவு மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால் இந்த நாட்டின் குழந்தைகளுக்கு சட்டத்தைப் பற்றிய அடிப்படை புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|