பாடசாலைப் போக்குவரத்து சேவைகளில் சுகாதார விதிமுறைகள் குறித்து பரிசோதனை – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன!

Tuesday, February 2nd, 2021

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகள், தனியார் சிற்றுார்திகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுகின்றமை தொடர்பில் ஆராய இன்றைய தினமும் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இப்பரிசோதனைகளுக்கிடையில் பாடசாலை பேருந்துகள் மற்றும் சிற்றுார்தி சாரதிகள், உதவியாளர்கள் போன்றோருக்கு எழுமாறாக பி.சீ.ஆர். மற்றும் ரெபிட் எண்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமெனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: